மனைவியை தாக்கிய கணவருக்கு 'காப்பு'

கெங்கவல்லி: கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்த, கட்டட தொழிலாளி பாபு, 31. இவரது மனைவி ரம்யா, 28. இவர்கள் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.



இதில் மனைவியை, கணவர் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரம்யா, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகார்படி கெங்கவல்லி போலீசார், பெண் வன்கொடுமை வழக்குப்பதிந்து, நேற்று பாபுவை கைது செய்தனர்.

Advertisement