நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

ப.வேலுார்:ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.


இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்
நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு வாங்கி செல்வர்.
கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு, 150 ரூபாய் கூடுதலாகி, 650 ரூபாய்க்கு விற்றதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement