சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது.

சிவகாசி காந்திநகர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து ஆயில் மில் காலனி, ரயில்வே பீடர் ரோடு, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாகப் பெருக்கெடுத்து வீணாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில்கலந்தது.

இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement