முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஜெருசலேம்: ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இவர் உச்ச தலைவர் அலி கமானியின் நெருங்கிய ராணுவ ஆலோசகரும் ஆவார்.
இவர் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியாகவும், மிக மூத்த ராணுவத் தளபதியாகவும் இருந்தார்.
ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி அலி சட்மானி தளபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஈரானில் உள்ள சுமார் 6000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
அசோகன் - ,
17 ஜூன்,2025 - 15:12 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
17 ஜூன்,2025 - 16:33Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
17 ஜூன்,2025 - 17:18Report Abuse

0
0
Reply
மேலும்
-
மின்கம்பத்தை மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய செயற்பொறியாளர் கைது
-
உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பாலஸ்தீனர்கள் பலி
-
இது தான் திராவிட மாடலா: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பா.ஜ.,வுக்கு பின்னால் தி.மு.க., ஒளியக்கூடாது: விஜய்
-
ஆன்லைன் டிரேடிங் மோசடி: ரூ. 160 கோடி சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை!
-
ஈரானுடனான பிரச்னைக்கு உண்மையான தீர்வு: பேச துணை அதிபரை அனுப்புவேன் என டிரம்ப் சூசகம்
Advertisement
Advertisement