விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதே வழக்கில், ஏ.டி.ஜி.பி., ஜெயராம், கோர்ட்டில் ஆஜரானார்.
அவர் ஆஜரான சிறிது நேரத்திலேயே நீதிபதி உத்தரவின்பேரில் கோர்ட் வளாகத்திலேயே சீருடையில் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி, விவரங்களை பதிவு செய்தனர்.
இந் நிலையில் குற்ற வழக்கில் கைது நடவடிக்கையை தொடர்ந்து ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை டி.ஜி.பி., பரிந்துரை செய்து இருந்தார். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி திருவாலாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருக்கிறார்.










மேலும்
-
கணவருக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை : திருமணமான 36வது நாளில் சம்பவம்
-
ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 15 பேர் பலி
-
சாலுமரட திம்மக்கா வாழ்க்கை திரைப்படமாகிறது.
-
ரூ.17 கோடி மோசடி: மலேஷியா தப்ப முயன்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகன் கைது
-
கட்டடத்தின் தரத்திலும், ஆயுளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் நீரின் பி.எச்., அளவு
-
பண மோசடி விவகாரம்: கர்நாடக துணை முதல்வர் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்