ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!

11

ஒட்டாவா: இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பினார்.


கனடாவில் நடந்து வரும் ஜி 7 மாநாட்டில், உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது, உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வை எட்டுவதில் ஜி7 தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் ஜி 7 மாநாட்டில் இருந்து பாதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேறினார். அவர் வாஷிங்டன் திரும்பினார். இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தன்னை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார்.

நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து பாதியில் வெளியேறியது குறித்து தவறாக கூறினார். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நாடு திரும்பியதாக கூறுகிறார். காரணம் அவருக்குத் தெரியாது.



ஆனால் நான் பாதியில் திரும்பி வந்தததுக்கும், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை விட மிகப் பெரியது. இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement