ஆன்லைன் டிரேடிங் மோசடி: ரூ. 160 கோடி சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை!

புதுடில்லி: பாரக்ஸ் ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக, ஏழு நகரங்களில் நடத்திய சோதனையின் அடிப்படையில், ரூ.160 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


பாரக்ஸ் ஆன்லைன் டிரேடிங் என்பது வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகும். பாரக்ஸ் சந்தை வாரத்தில் ஐந்து நாட்கள் 24 மணிநேரமும் இயங்கும். இது உலகின் மிகப்பெரிய சந்தையாகும். பாரக்ஸ் ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, ஏழு நகரங்களில் நடத்திய சோதனையின் அடிப்படையில், ரூ.160 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாரக்ஸ் ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக, சென்னை, மும்பை உட்பட 7 நகரங்களில் கடந்த ஜூன் 13ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


இதன் அடிப்படையில் இந்த வழக்கில்தொடர்புடையவர்களுக்கு சொந்தமாக ஸ்பெயினில் உள்ள சொத்துக்கள் உட்பட இதுவரை ரூ.160 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement