கங்கையம்மன் ஜாத்திரை விழா கோலாகலம்
திருத்தணி:திருத்தணி அடுத்த நீலகண்டாபுரம் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு சக்தி அம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, மாலையில் கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு களிமண்ணால் செய்த கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்
-
'டி435 சூப்பர்' ஆட்டோ கிரீவ்ஸின் 'மைலேஜ் கிங்'
-
டி.வி.எஸ்., 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 200 4வி' 'அப்டேட்டட்' கிராபிக்ஸ், சஸ்பென்ஷன்
-
'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,
-
ஐந்து ஸ்டார் பெற்ற மாருதி 'டிஸையர்'
-
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; ஒட்டன்சத்திரம் அருகே துயர சம்பவம்
Advertisement
Advertisement