விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகரில் உலக ரத்த கொடையாளர் தினம் 2025ஐ முன்னிட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இதை துணை மருத்துவ கண்காணிப்பாளர் அன்புவேல் துவங்கி வைத்தார். 2வது நிகழ்வாக நேற்று மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற தன்னார்வ ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் ஜெயசிங் முன்னிலை வகித்து ரத்த தானம் கொடுத்து துவங்கி வைத்தார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 70 பேர் ரத்த தானம் செய்தனர்.

Advertisement