விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜூன் 20ல் கலெக்டர் தலைமையில் நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஜூன் 27 காலை 11.00 மணிக்கு புதிய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடக்கும்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.

Advertisement