வளர்ச்சி திட்டப் பணிகள் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் ஆய்வு செய்தார்.

சிதம்பரம் அடுத்த அனுவம்பட்டு வாய்க்கால், வண்டிகேட் அருகே உள்ள மீதிக்குடி வாய்க்கால் துார்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தில்லையம்மன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் இருப்பதை பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகளை பார்வையிட்டனர்.

அருவாள்மூக்கு திட்டத்தில், தடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

சப் கலெக்டர் கிஷன்குமார், கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, தாசில்தார் கீதா, நகராட்சி கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், கொள்ளிடம் உட்கோட்ட வடிகால் செயற் பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் உடனிருந்தனர்.

Advertisement