முருக பக்தர்கள் மாநாடு: மதுரை செல்ல சிறப்பு ரயில்

சென்னை: மதுரையில் வரும், 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 21ம் தேதி இரவு 9:55க்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 5:40 மணிக்கு மதுரை சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை, 8:45க்கு திருநெல்வேலி செல்லும்.
அதேபோல, 22ம் தேதி இரவு 9:40 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, நள்ளிரவு, 12:30 மணிக்கு மதுரை வரும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:15 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மாநாட்டிற்கு வரும் முருக பக்தர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சாத்துார், கோவில்பட்டியில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.










மேலும்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
-
மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் உண்ணாவிரதம்; அ.தி.மு.க., அறிவிப்பு
-
சுபான்ஷூ சுக்லாவின் ஆக்சிம் 4 விண்வெளி பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!
-
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு
-
பாக். பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
-
வலு அடைந்தது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு