திருட்டு டூவீலர்களை விற்ற பா.ஜ.,----ஹி.மு., நிர்வாகிகள் கைது

மதுரை: மதுரையில் திருடிய டூவீலர்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்றுவந்த நாமக்கல் பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை புதுார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தினேஷ்வரன் 33, என்பவர் ஓட்டிவந்த வாகனத்திற்கு ஆவணங்கள் இல்லை.

விசாரணையில் அவர் மதுரை புதுார், தல்லாகுளம் பகுதிகளில் டூவீலர்களை திருடி வந்தது தெரிந்தது. திருடிய டூவீலர்களை குமாரபாளையம் ஹிந்து முன்னணி நகர் தலைவர் பாலாஜி 32, வட்டமலை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் கவுதம் 23, பா.ஜ., தரவு மேலாண்மை மாவட்ட துணைத்தலைவர் விவேக்பாலாஜி 40, ஆகியோரிடம் கேட்ட விலைக்கு தினேஷ்வரன் விற்று வந்துள்ளார். திருட்டு டூவீலர்களை பாலாஜி உள்ளிட்டோர் 'சர்வீஸ்' செய்து நாமக்கல் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர்.

4 பேரையும் மதுரை போலீசார் கைது செய்து 13 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement