விகாஸ் இன்ஜின் சோதனை; வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படும் விகாஸ் இன்ஜினின் சோதனை 17 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'இஸ்ரோ' வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வீரர்களை அனுப்புவதற்கு முன்னேற்பாடாக, பல்வேறு கட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகளின் இன்ஜின்கள், குறிப்பாக விகாஸ் இன்ஜின்கள் மற்றும் கிரையோஜெனிக் இன்ஜின்கள் தொடர்பான பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 18) ககன்யான் திட்டத்தில் பயன்படும் விகாஸ் இன்ஜினின் சோதனை 17 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றதை, இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
இந்த வெற்றி, எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யானுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. விகாஸ் இன்ஜின், இஸ்ரோவின் PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய திரவ உந்து சக்தி இன்ஜின் ஆகும்.
மேலும்
-
உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்; 'டாப் 10' பட்டியல் இதோ!
-
6 நாட்களில் 66 விமான பயண சேவை ரத்து; போயிங் டிரீம்லைனர் விமானங்களால் அச்சம்!
-
ரூ.3 ஆயிரத்திற்கு கார்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்; ஆகஸ்ட் 15ம் தேதி முதல் புதிய அறிமுகம்
-
பாலி அருகே 10 கி.மீ. உயரம் எழுந்த எரிமலை குழம்பின் புகை; டில்லிக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
-
போர் தொடங்குகிறது; சமரசத்துக்கு வாய்ப்பில்லை; ஈரான் தலைவர் கமேனி அறிவிப்பு
-
ஆந்திராவில் பெண் நக்சல் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி