ரூ.6.76 கோடியில் தெப்பக்குளங்கள் சீரமைப்பு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உள்ள தெப்பக்குளம், பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் ஆகியவை ரூ.6.76 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.

அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி முன் உள்ள 'பவித்ர புஷ்கரணி' தெப்பக்குளம் போதிய பராமரிப்பின்றி பாசி படர்ந்திருந்தது. ஆண்டுதோறும் நடத்தப்படும் தெப்பத் திருவிழா, பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் நடைபெறும் நிலையில், குளத்தின் படிக்கட்டுகள், மைய மண்டபம் சேதமடைந்து காணப்பட்டன. இவற்றை சீரமைக்கும் வகையில் அறநிலையத்துறை சார்பில் ரூ. 6 கோடியே 76 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்க உள்ளன.

இதனை நேற்று காலை காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர் அருணாதேவி, உதவிப் பொறியாளர் கிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் குமரன், வலையபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் தீபாதங்கம், தி.மு.க., கிளைச் செயலாளர் முத்து பொருள், பி.ஆர்.ஓ., முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement