தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு

குன்னுார் : தென்மாநில தேயிலை ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 39.59 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த 24வது ஏலத்தில்,'16.28 லட்சம் கிலோ இலை ரகம்; 5.21 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 21.49 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
'12.74 லட்சம் கிலோ இலை ரகம்; 4.58 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17.32 லட்சம் கிலோ என, 80.60 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 102.06 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 17.68 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, விலை வீழ்ச்சி மற்றும் விற்பனை சரிவால், 50 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.
6.14 லட்சம் கிலோ தேக்கம்
மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்பட்டது. பொதுவாக ஒன்றரை லட்சத்திற்கு குறைவாக வரும் தேயிலை துாள், 'இந்த முறை, இதுவரை இல்லாத வகையில், 7.40 லட்சம் கிலோ,' என, அதிகபட்சமாக வந்தது. இருந்த போதிலும், 1.26 லட்சம் கிலோ என்ற அளவில், 17.09 சதவீதம் மட்டுமே விற்பனையாகி, 6.14 லட்சம் கிலோ தேக்கம் அடைந்தது. சராசரி விலை,91.22 ரூபாயாக இருந்தது; கிலோவிற்கு ஒரு ரூபாய் உயர்ந்தது. 1.15 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 58 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.
கோவை, கொச்சி ஏலம்
கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 5.40 லட்சம் கிலோ வந்ததில், 4.32 லட்சம் கிலோ என 80.10 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 125.82 ரூபாய் என இருந்தது. கிலோவிற்கு ஒரு ரூபாய் குறைத்து விற்பனை செய்த நிலையில், 5.44 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 44 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் உயர்ந்தது.
கொச்சி ஏல மையத்தில், '12.21 லட்சம் கிலோ வந்ததில், 9.95 லட்சம் கிலோ,' என, 81.54 சதவீதம் விற்றது. சராசரி விலை, 153.89 ரூபாய் என இருந்தது. 15.32 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. தென் மாநில அளவில், 39.59 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்த நிலையில், கடந்த ஏலத்தை விட, 64 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.
மேலும்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா