இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்

ஜெருசலேம்: தெற்கு இஸ்ரேலின் சொரோக்காவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த ஆறு நாட்களாக சண்டை நீடித்து வருகிறது. மோதல் துவங்கிய ஆறாவது நாளான நேற்று வரை ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கு பதில் தாக்குதலை ஈரானும் நடத்தி வருகிறது. அலை அலையாக ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எனப்படும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவியது.
ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் கவசங்கள் தடுக்கின்றன. அதை மீறி விழுந்த ஏவுகணைகள் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட பல நகரங்களை தாக்கியுள்ளன.
தெற்கு இஸ்ரேலில் மருத்துவமனை மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும்
-
தக்லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
-
3 நாடுகள் பயணம் நிறைவு: டில்லி திரும்பினார் பிரதமர் மோடி
-
"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்; விசாரணைக் குழு பரிந்துரை
-
உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்