பெரியபோது கிராமத்தில் கண் சிகிச்சை முகாம்
ஆனைமலை : ஆனைமலை அருகே, பெரியபோது பகுதியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஆனைமலை அருகே, பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
அதில், கண்புரை, கண்நீர் அழுத்த நோய், சர்க்கரை நோயினால் கண் விழித்திரை நோய் பாதிப்பு போன்ற கண் பரிசோதனை நடைபெற்றது.மொத்தம், 15 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் முகமது யாசர் அராபத், கண் மருத்துவ உதவியாளர் பொன் பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குழந்தைசாமி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலெக்ஸ், ரூபன், சாமுவேல் ராஜா மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பாபு, சக்திவேல், ஜீவிதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மன்னிப்பு கேட்டு ஏர் இந்தியா சேர்மன் உருக்கம்; தாங்க முடியாத துயரம் விமான விபத்து
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா