சிறு பாலங்களில் துார்வாரும் பணி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

உடுமலை : ஆனைமலை, பூலாங்கிணறு உள்ளிட்ட ரோடுகளிலுள்ள, பாலங்களில், மழை நீர் தடையில்லாமல் செல்ல துார்வாரும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், மாவட்ட முக்கிய சாலைகள் பிரிவின் கீழ், ஆனைமலை - பூலாங்கிணறு, மாவட்ட இதர சாலைகள் பிரிவில், தேவனுார்புதுார் - நல்லார் காலனி, ஆண்டியூர், தளி - பூலாங்கிணறு உள்ளிட்ட ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரோடுகளின் குறுக்கே பல இடங்களில், மழை நீர் ஓடைகள் குறுக்கிடுகிறது. அப்பகுதிகளில், சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில், இந்த பாலங்களில் தடையில்லாமல், வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலத்தின் இருபுறங்களிலும், புதர் மற்றும் மண்மேடுகளையும் அகற்றி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அனைத்து ரோடுகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement