முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை

சேலம்: மதுரையில் வரும், 22ல், ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதில் முருக பக்தர்கள் திரளானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் பயன்படுத்த, சுவாமி முருகனின் அடையாளங்களான, 'வேல், மயில், ஓம்' ஆகியவை, எம்ராய்டரி முறையில் தைத்து, தனித்துவ முறையில் சட்டைகள், சேலத்தில் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து நெய்க்காரப்பட்டியில் துணி கடை வைத்துள்ள ராஜவேல், 45, என்பவர் கூறியதாவது:
கடந்த, 15 ஆண்டாக ரெடிமேட் சட்டைகள் தயாரித்து விற்கிறோம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, தமிழ் கடவுள் முருகனின் அடையாளங்களான வேல், மயில், ஓம் எழுத்துகள் இணைந்து, காட்டன் மற்றும் லெனின் துணியில் தனித்துவ எம்ப்ராய்டரி ஓவியத்துடன், வெள்ளை நிற சட்டைகள் தயாரித்து, ஒன்று, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இச்சட்டைகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா