நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு இன்று (ஜூன் 19) காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விமானம் புறப்பட்டுச் சென்றது. லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் டில்லிக்கு மீண்டும் திருப்பி விடப்பட்டது.
டில்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு பிறகு கடந்த 7 நாள்களில், அதிக விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்செய்யப்படுவது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (5)
muthurajrsk@yahoo.in - ,
19 ஜூன்,2025 - 15:16 Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
19 ஜூன்,2025 - 16:24Report Abuse

0
0
SUBRAMANIAN P - chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 16:59Report Abuse

0
0
Reply
தென்காசி ராஜா ராஜா - ,
19 ஜூன்,2025 - 13:23 Report Abuse

0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வதே போரின் இலக்கு; சொல்கிறார் இஸ்ரேல் அமைச்சர்
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 25 பேர் உயிரிழப்பு
-
பித்தளை மரம், வெள்ளிப் பானை, ஓவியங்கள்: ஜி7 தலைவர்களுக்குப் மோடியின் அன்பு பரிசுகள்; வெளியான சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
-
மா விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு
-
காங்கிரசுடன் கருத்து வேறுபாடு: சசி தரூர் ஒப்புதல்
-
ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
Advertisement
Advertisement