முதல்வர் மருந்தகம் இல்ல... 'முதல்வர் மாவகம்' ; அண்ணாமலை விமர்சனம்

சென்னை: முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை; மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், தி.மு.க., அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும்
-
அசாம் காங்.க்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளின் 5000 சமூக ஊடக கணக்குகள்; முதல்வர் குற்றச்சாட்டு
-
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்
-
' போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்': பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்
-
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
ஈரானுக்கு எதிரான போருக்கு ஒருநாள் செலவு ரூ. 8,659 கோடி: வெளியான புதிய தகவல்
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை: ஜனவரி முதல் இதுவரை 213 பேரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை!