அரசு பள்ளியில் பாராட்டு விழா
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பொதுதேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கும், சிறப்பான கல்வி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பேரூராட்சி மன்ற சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் மலர்மன்னன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் ராஜஸ்ரீ, வேல்விழி, ஜெயபார்வதி, அனுசுயா ஆகியோருக்கும், 400 மதிப்பெண்கள் பெற்ற 36 மாணவிகளுக்கு, ராமானுஜர் அறக்கட்டளை சார்பில் தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் சம்பத் குமார், செல்வகுமார், சேகர் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
நுாறு சதவிகித தேர்ச்சி அளித்த அனைத்து ஆசிரி யர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
உதவி தலைமை ஆசிரியர் சிவகாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவிகள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.
மேலும்
-
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு
-
கவர்னரின் அதிகாரங்கள் என்னென்ன? பள்ளி புத்தகங்களில் சேர்க்கிறது கேரளா
-
'பாஸ்வேர்டை மாற்றுங்கள்' 1,600 கோடி 'லாகின்' தகவல் கசிவு
-
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
-
பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
-
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு