போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் விபரீத முடிவு



பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பெரும்பாலை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தண்டபாணி, 33. இவர் கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஜாமினில் வந்தவர் கடந்த, 18 மாலை, 4:00 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை


மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக ஓமலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அதிகாலை, 2:15 மணிக்கு தண்டபாணி இறந்தார். பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement