விருதுநகரில் வந்தே பாரத் வீணாக நிற்பதேன்

மதுரை: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஒருமாதமாக வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - எழும்பூர் இடையே 650 கி.மீ., துாரத்திற்கு மதுரை வழியாக 2023 செப்., 24 முதல் 'வெள்ளை' நிற வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. செவ்வாய் தவிர்த்து தினமும் காலை 6:05மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (20666) மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது.
மறுமார்க்கம் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில் (20665), இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.
பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டதையடுத்து 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயில், ஜன. 15 முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் 8 பெட்டிகள் கொண்ட ரயில் 'ஸ்பேர் ரயிலாக' மாற்றப்பட்டு மே 15 முதல் விருதுநகர் ஸ்டேஷனின் '1ஏ 'பிளாட்பாரத்தில் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி வீணாக நிறுத்தியிருப்பதற்கு பதிலாக எதாவது ஒரு வழித்தடத்தில், இந்த ரயிலை இயக்கலாமே எனக்கேட்ட போது ரயில்வே தரப்பில் கூறியதாவது: திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால்ஏற்கனவே இயக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட 'ரேக்', ஸ்பேர் ரயிலாக மாற்றப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்களில் 'ஆரஞ்சு' நிற வந்தே பாரத் ரயில்கள்இயக்கப்படுகின்றன.எனவே இந்த ஸ்பேர் ரயிலை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் ஏதேனும் ஒன்று பராமரிப்பில் இருந்தாலோ, தேவைப்படும் பட்சத்தில் சிறப்பு ரயிலாகவோ இயக்க முடியும்.
விருதுநகரில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேர் ரயில் பெட்டிகள் தினமும் சிறிது துாரம் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மானாமதுரை அல்லது மதுரையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது என்றனர்.


மேலும்
-
யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் மோடி பேச்சு
-
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது; அதிருப்தியை கொட்டி தீர்த்த டிரம்ப்!
-
சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்
-
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
-
அணைகள் நீர்மட்டம்