ரயில்வே சுரங்க பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு: மக்கள் மகிழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார்-அரூர் சாலையில், புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும், 50க்கும் மேற்பட்ட பயணிகள் எக்ஸ்பிரஸ், கூட்ஸ் ரயில்கள் கோவை, சென்னை என, இரு மார்க்கத்தில் செல்கிறது. அவ்வாறு தொடர்ந்து செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால் வேப்பிலைபட்டி, தாளநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கடத்துார், தர்மபுரி உள்ளிட்ட நகரங்களுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கேட்டில் மாட்டிக் கொள்கிறது. இதற்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த டிச.,30ல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சிரஞ்சீவி, பகுதி கோட்ட பொறியாளர் ஜவஹர், இருப்பு பாதை ஆய்வாளர் கண்ணன், அரூர் ஆர்.டி.ஓ.,சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் அருகில், ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்தனர்.
மேலும்
-
மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு
-
விருதுநகரில் வந்தே பாரத் வீணாக நிற்பதேன்
-
நாளை முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழாவா? மறைமுக கணக்கெடுப்பால் அச்சம்
-
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு