நாகர்கோவில் பணிமனைக்காக விரைவு ரயில் சேவையில் மாற்றம்
சென்னை:"நாகர்கோவில் ரயில்வே பணிமனை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், அந்த்யோதயா உட்பட ஏழு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
நாகர்கோவில் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இதனால், நாகர்கோவில் - கன்னியாகுமரி ரயில்வே தடத்தில், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:
தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில், நாளை முதல் ஜூலை 21 வரை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்கப்படும்
நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில், வரும் 23 முதல் ஜூலை 22 வரை, கன்னியாகுமரியில் இருந்து மாலை 4:35 மணிக்கு இயக்கப்படும்
தாம்பரம் - நாகர்கோவில் மற்றொரு அதிவிரைவு ரயில், வரும், 26ம் தேதி முதல் ஜூலை 17 வரை, கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்கப்படும்
சென்ட்ரல் - நாகர்கோவில் விரைவு ரயில், வரும் 27 முதல் ஜூலை 18 வரை, கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்கப்படும்
நாகர்கோவில் - சென்ட்ரல் இரவு 8:00 மணி ரயில், வரும் 29 முதல் ஜூலை 20 வரை, கன்னியாகுமரியில் இருந்து இரவு, 8:30 மணிக்கு இயக்கப்படும்
தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில், வரும் 22 முதல் ஜூலை 21 வரை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்
நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா ரயில், வரும் 23 முதல் ஜூலை 22 வரை, திருநெல்வேலியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சில வரி செய்தி
-
முருகன் மாநாட்டுக்கு மனித சங்கிலி வேங்கைவயலுக்கு ஒன்றுமில்லை ஏன்? திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி
-
ஓவிய சிற்ப கண்காட்சிக்கு 50 கலை படைப்புகள் தேர்வு
-
டெங்கு காய்ச்சலால் தினம் 50 பேர் பாதிப்பு
-
நாட்டு வெடி குண்டு கடித்த 3 நாய்கள் தலை சிதறி பலி
-
மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு