இரவிகுளம் தேசிய பூங்கா பொன்விழா கொண்டாட முடிவு

மூணாறு:கேரளா மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. 1975 மே 31ல் வனவிலங்கு சரணாலயமாகவும், 1978ல் மாநிலத்தில் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது.
அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள வரையாடு , யானை, சிங்கவால் குரங்கு, புலி, சிறுத்தை, காட்டு மாடு உட்பட பல்வேறு வனவிலங்குகள், 140 வகை பறவைகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவின் மிகவும் உயரமான ஆனமுடி சிகரம் (8842 அடி) பூங்காவில் உள்ளது. பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இப்பூங்காவின் பொன் விழா ஆண்டை ஓராண்டு கொண்டாட வனத்துறை தயாராகி விட்டது. அதற்காக திருவனந்தபுரத்தில்' லோகோ' வெளியிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு
-
கவர்னரின் அதிகாரங்கள் என்னென்ன? பள்ளி புத்தகங்களில் சேர்க்கிறது கேரளா
-
'பாஸ்வேர்டை மாற்றுங்கள்' 1,600 கோடி 'லாகின்' தகவல் கசிவு
-
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
-
பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
-
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
Advertisement
Advertisement