உலக யோகா தினம் கொண்டாட்டம்

பழநி: பழநியில் உலக யோக தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லுாtரிகளில் யோகா பயிற்சி நடைபெற்றது.

பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700 மாணவிகள் பங்கேற்ற யோகா பயிற்சி நடந்தது. சூரிய வடிவில் மாணவிகள் நின்று சூரிய நமஸ்காரம் செய்தனர். தலைமை ஆசிரியர் கண்ணகி பங்கேற்றார்.

சிவாலயா யோகா மையத்தின் சார்பில் 40க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர். சூரிய நமஸ்காரம், வீரபத்ராசனம், உசட்டாசனம், மூச்சு பயிற்சி, தியானப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மைய இயக்குனர் சிவக்குமார், புலிப்பாணி ஆசிரம சித்த மருத்துவர் பன்னீர்செல்வம், கல்பனா கலந்து கொண்டனர். பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது ஆசிரியர் ரோஜா ஈஸ்வரி,,பெருமாள் சாமி பயிற்சி வழங்கினர். கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன், யோகா ஆசிரியர் திருப்பதி, பேராசிரியர்கள் பாக்கியராஜ், சண்முகசுந்தரம், தமிழ் நாயகன், சக்திவேல் கலந்து கொண்டனர்.

Advertisement