கவர்னர் ரவி மதுரையில் இன்று யோகா செய்கிறார் அறுபடை முருகனையும் தரிசிக்கிறார்

மதுரை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் இன்று(ஜூன் 21) நடக்கும் யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்கிறார்.
பள்ளி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகிக்கிறார். இதற்காக நேற்றிரவு 8:00 மணியளவில் மதுரை வந்த கவர்னர், வேலம்மாள் பள்ளி அருகேயுள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை 7:40 மணிக்கு பள்ளி மைதானத்திற்கு செல்கிறார். அங்கு காலை 9:15 மணி வரை நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசனங்களை செய்கிறார். பிறகு ஓட்டலுக்கு திரும்பி ஓய்வு எடுக்கிறார்.
காலை 10:30 மணிக்கு முருகபக்தர்கள் மாநாடு இடத்திற்கு சென்று அறுபடை முருகனை தரிசிக்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 11:00 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகை, முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
அடுத்த வேலை; அடுத்த டார்கெட்; புதிய ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்த காங் எம்.பி.,சசிதரூர் ரஷ்யாவுக்கு பயணம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,