பராமரிப்பு பணியால் ரயில் சேவையில்  தற்காலிக மாற்றம்

மதுரை: நாகர்கோவில் யார்டு - கன்னியாகுமரி இடையே பராமரிப்புப் பணி காரணமாக முக்கிய ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி வரை நீட்டிப்பு



ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயில் (12667), ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர ரயில் (12689), கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படுகின்றன.

மறுமார்க்கம், ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை வாரம் 3நாட்கள் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (22658), ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர ரயில் (12668), கன்னியாகுமரியில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும். ஜூன் 29 முதல் ஜூலை 20 வரை நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் (12690), கன்னியாகுமரியில் இருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படும்.மேற்கண்ட ரயில்கள் நாகர்கோவிலில் ஐந்து நிமிடங்கள் நின்று செல்லும்.

பகுதி ரத்து



ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கம் ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692), திருநெல்வேலியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும். இவ்விரு ரயில்களும் திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement