விவசாயம் செய்யும் சமவெளி மக்கள் எல்லையில் சலுகை கேட்டு மனு
கோத்தகிரி : 'நீலகிரியில் விவசாயம் செய்யும் சமவெளி பகுதி விவசாயிகளுக்கு எல்லையில் சலுகை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்க, நீலகிரி மாவட்ட தலைவர் ஜோகராஜ், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனு:
கோவை மாவட்டத்தை சேர்ந்த சிலர், நீலகிரியில் நிலங்களை வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், அடிக்கடி நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் மாவட்ட எல்லையில், இ--பாஸ் நடைமுறை உள்ளது. அங்கு மின்சார வாகனங்களுக்கு இலவசமாகவும், இதர வாகனங்களுக்கு கட்டணம் வாங்கியும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த சோதனை சாவடிகளில் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்கள் மற்றும் பயிர் செய்ததற்கான ஆவணங்களை காட்டினாலும், வாகன பதிவு எண் அடிப்படையில், நுழைவு கட்டணம் வசூலித்து, அனுமதி சீட்டு பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றுபடுகிறது. 'இதற்கு விலக்கு அளிக்க வேண்டும்,' என, நீலகிரி எஸ்.பி., மற்றும் கலெக்டர் அலுவலகத்தை அணுகியும் நடவடிக்கை இல்லை.
ஆனால், விவசாயம் செய்து சிரமப்படும் விவசாயிகளுக்கு அனுமதி சீட்டு கேட்பதும், நுழைவு கட்டணம், பசுமை வரி வசூலிப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!