அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

கோத்தகிரி : கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில், மாணவர்கள் சூரிய நமஸ்காரம், தனுராசனம், புஜங்காசனம், பச்சி மத்தாசனம், ஆலாசனம், யோகா முத்ரா ஆசனம் மற்றும் தாடாசனம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர். இதே போல, கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement