சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்

கூடலுார், : கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் ஹெல்த் கேம்ப், தனியார் எஸ்டேட் பகுதிகளில், இரவில் உலா வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. யானைகள், அவ்வப்போது ஓவேலி சாலைகளிலும் உலா வருகிறது.
நேற்று முன்தினம், அதிகாலை வனச்சோதனை சாவடி அருகே ஓவேலி சாலையில் உலா வந்த காட்டு யானை, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரை சேதப்படுத்தி, பள்ளி வளாகத்துக்குள் சென்று, அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது.
அச்சமடைந்துள்ள பெற்றோர் கூறுகையில், 'அரசு பள்ளியை ஒட்டிய சாலை வழியாக இரவில் காட்டு யானைகள் நடந்து சென்றாலும், இதுவரை வளாகத்துக்குள் நுழைந்தது இல்லை.
தற்போது, சுற்றுச்சுவரை சேதப்படுத்தி உள்ளே சென்று வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி