மாயமாகும் நிழற்குடை சீரமைக்க எதிர்பார்ப்பு

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது களாம்பாக்கம் ஊராட்சி. இங்குள்ள பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், ஊராட்சி அலுவலகம் எதிரே பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.

இப்பகுதி மக்கள் திருவாலங்காடு, திருவள்ளூர், பேரம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களாக நிழற்குடையை பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

இதனால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர். எனவே, நிழற்குடையை சூழ்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement