கோவையில் நாளை கண்காட்சி

பப்பிக்குள் இருக்கும் தனித்திறனுக்கு மேடை அமைத்து தரும் வகையில், கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், கோவை, அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், நாளை அனைத்து இன பப்பிகளுக்கான கண்காட்சி நடக்கிறது.
மொத்தம் 11 பிரிவுகளில், இன வாரியாக, பப்பிகளுக்கான கண்காட்சி நடக்கிறது. நாட்டு இன நாய்களுக்கும், பிரத்யேக போட்டி உண்டு. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பப்பிகளுக்கு, சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி, அதில் தேர்வாகும் முதல் எட்டு பப்பிகளுக்கு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க வரும் வித்தியாசமான பப்பிகளை காண, பார்வையாளராகவும் கலந்து கொள்ளலாம். கண்காட்சியில் பங்கேற்கும் பப்பியின் வித்தியாசமான முகபாவனையை, சேட்டையை ரசிக்கலாம்.
இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, 95852 66566/ 98422 30865 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; பாதி வழியில் சென்னைக்கு திரும்பிய லண்டன் விமானம்!
-
இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!
-
ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வீசிய 'பங்கர் பஸ்டர்' குண்டு!
-
கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,
-
பாம்பும் பாசத்துக்குரியதே! 2கே கிட்ஸ் விருப்பம்