கோதாவரி உபரி நீர் திறப்பு தேவகவுடா எதிர்ப்பு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, 'கங்கா சாம்ராதா ஸ்ரீ புருஷ' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது. பல மடாதிபதிகள் பங்கேற்றனர்.
தேவகவுடா பேசியதாவது:
சித்ரதுர்கா, துமகூரு, கோலார், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ளது. கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கூடாது. அப்படி செய்தால் கர்நாடகாவுக்கு தான் அநீதி. கர்நாடகாவும் குடிநீர் பிரச்னையை சந்திக்கிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இந்த பிரச்னையை தீர்க்க அவரால் மட்டுமே முடியும்.
என்னுடைய 70 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், அனைத்து சமூகமும் எனக்கு ஆதரவாக இருந்தது. என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளேன். எனக்கு கால்கள் வலிக்கலாம். ஆனால், தலை இன்னும் கூர்மையாக உள்ளது. என்னுடைய கஷ்டமான காலக்கட்டத்தில் மனைவி சென்னம்மா எனக்கு உறுதுணையாக இருந்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'