ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!

புதுடில்லி: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 920 புள்ளிகள் சரிந்து 81,488 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

ஈரான் மீதான அமரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள்

சரிவுடன் வர்த்தமாகி வருகிறது. வார தொடக்க முதல் நாளான இன்று (ஜூன் 23) தேசிய பங்குச்சந்தையான நிப்டி 287 புள்ளிகள் சரிந்து 24,825 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளன. நிப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

Advertisement