மீன்பிடி திருவிழா

நத்தம் : நத்தம் அருகே சிறுகுடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் மற்றும் கடைக் கண்மாய்களில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் நத்தம்,கோட்டையூர், சாணார்பட்டி, சிறுகுடி, செந்துறை,சிங்கம்புணரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.

இதில் கட்லா, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாரை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது.

Advertisement