கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

நத்தம் : நத்தம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு நத்தம் வழியாக மதுரை- துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை நெல்லூரை சேர்ந்த பிரசாத் 27 என்பவர் ஓட்டி சென்றார். நத்தம் அருகே வீமாஸ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. காரின் முன்பக்கம் நொறுங்கியது. விபத்தில் கார் ஓட்டிய பிரசாத், நெல்லூரை சேர்ந்த ஜனார்த்தன் 43. சீனிவாசன் 47, வெங்கடேஷ் 49 ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
Advertisement
Advertisement