காவலர்கள் பதவி உயர்வு உத்தரவு திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை:தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் வெளியிட்ட பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற்று, 2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.

இ.பி.எஸ்., அறிக்கை:
2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், திமுக அரசு காவல் துறையினருக்கு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை ஒன்றை அளிப்பதுபோல், கடந்த 13.6.2025 அன்று செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நிலைக் காவலர்களாக 10 ஆண்டுகளும்; முதலாம் நிலைக் காவலர்களாக 3 ஆண்டுகளும்; பிறகு தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகளும் பணிபுரிந்தபின், அதாவது 23 ஆண்டுகால பணிக்குப்பிறகுசிறப்பு சார்பு ஆக உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது முதலாம் நிலை காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

“சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு 'சோல் வேறு செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்.

ஒட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும் அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலேயே பறக்கவிடுவதும் தி.மு.க.,-விற்கு கை வந்த கலை.

இந்த பதிய பதவி உயர்வு உத்தரவால் பதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லைபோ. 2001-2005 கால கட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களை காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற, வேண்டும் என்றும் பணியில் உள்ளகாவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021 ல் தி.மு.க., அளித்த தேர்தல்வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement