திருப்பரங்குன்றம் வழக்கு; கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்காக, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா விற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற அனைத்து பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும், என மனு செய்தார்.
திருப்பரங்குன்றம் ஒசீர் கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிடக்கூடாது. அப்பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனு செய்தார்.
விழுப்புரம் செஞ்சி மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், 'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. மலையை சமணர் குன்றாக அறிவிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் ஜெ .நிஷா பானு , எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.
இதில் மாறுபட்ட நிலைப்பாட்டை நீதிபதி ஸ்ரீமதி எடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்






மேலும்
-
நடிகர் ஸ்ரீகாந்த் கைதான போதைப்பொருள் விவகாரம்: சென்னை போலீசார் அதிர்ச்சி தகவல்
-
ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி மரணம்
-
வெற்றி பெற்றதே நீங்க தானே? பொய் பேசாதீர்கள் என ராகுலுக்கு பட்னவிஸ் பதிலடி
-
பீஹாரில் அணு மின் நிலையம்: உறுதி அளித்தார் மத்திய அமைச்சர் மனோகர் லால்
-
டிரம்ப் அறிவிப்புக்கு பிறகும் ஈரானில் தொடரும் தாக்குதல்
-
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த முயற்சிக்கு உதவ தயார் : மத்திய அரசு அறிவிப்பு