வெற்றி பெற்றதே நீங்க தானே? பொய் பேசாதீர்கள் என ராகுலுக்கு பட்னவிஸ் பதிலடி

3

மும்பை: 25 தொகுதிகளில் 8 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக ராகுல் கூறுகிறார். அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன என ராகுலுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.


மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருவதாக, மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்தார்.


இது குறித்து தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் அவமானகரமான தோல்வியால் உங்கள் வலி நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மைதான்.
மஹாராஷ்டிரா தேர்தலில் குறிப்பிட்ட 25 தொகுதிகளில் 8 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக ராகுல் கூறுகிறார். அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன.


இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ராகுல் இருட்டு அறையை நோக்கி அம்புகளை எய்தப் போகிறார்? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொது வெளியில் அள்ளி வீசுவதற்கு முன், ராகுல் தமது கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் விவரங்களை கேட்டுவிட்டு பேசினால் நல்லது என பட்னவிஸ் கூறியுள்ளார்.

Advertisement