குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்

நத்தம் : இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பள்ளி குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் 35. இவர் நேற்று காலை தனது டூவீலரில் மகள் கவினயா 10, மகன் வருண் 7, ஆகியோரை ஏற்றிகொண்டு கோவில்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

செல்லப்பநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே அதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி 29, என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மோதியது.

இதில் தடுமாறி கீழே விழுந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், பாலமுருகன், கவினயா, வருண் ஆகிய மூன்று பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், துரைப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement