கஞ்சா விற்ற தாய், மகன் மீது குண்டாஸ்

தேனி: மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5க்கும் மேற்பட்ட வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 26ல் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டி செல்வராணி 53, அவரது மகன் ராஜபிரபு 37, இருவரை தேனி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

இதில் செல்வராணி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைதாகி இருந்தார். அதே போல் தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கொரட்டலுார் கர்னாடிக்குருவி ரெட்டி 42, என்பவரை ஆண்டிபட்டி போலீசார் மே 13ல கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பரிந்துரை செய்தார். அதற்கான உத்தரவை நிலக்கோட்டை சிறையில் உள்ள செல்வராணி, தேக்கம்பட்டி சிறையில் உள்ள ராஜபிரபு, கர்னாடிக்குருவி ரெட்டி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

Advertisement