5 நாள் பட்டறிவு பயணமாக கர்நாடகா சென்ற விவசாயிகள்



பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறையின், 'அட்மா' திட்டத்தில், 20 விவசாயிகள், 5 நாள் பட்டறிவு பயணமாக, கர்நாடகா மாநிலம் மாண்டியா பண்ணைக்கு நேற்று முன்தினம் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்குள்ள விவசாயிகள், இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது, அவர்கள் கடைப்பிடிக்கும் தொழில்நுட்பம், பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் குறித்து நேரடியாக காண உள்ளனர்.


மேலும் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட செயல்பாடுகளை பார்வையிட உள்ளனர் என, பனமரத்துப்பட்டி வட்டார 'அட்மா' தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா தெரிவித்துவிட்டு, விவசாயிகளை அழைத்துச்சென்றார்.

Advertisement