மாயமாகி வரும் பொதுக்குளம் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

பொன்னேரி:கோரை புற்கள் வளர்ந்து, பராமரிப்பின்றி உள்ள பொதுக்குளம் சீரமைக்கப்படாததால், மழைநீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆலையம்மன் நகரில் உள்ள பொதுக் குளம், பராமரிப்பு இன்றி உள்ளது.
மேலும், குளம் முழுதும் கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன.
இதனால், மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், மெதுார் பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது.
அவ்வப்போது, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இங்குள்ள குளம் பல ஆண்டுகளாக துார்வாரி பராமரிக்கப்படாததால், குளத்தில் மழைநீர் தேங்குவதில்லை. தேங்கினாலும், அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை பராமரித்தால் கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, பருவ மழைக்கு முன் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
நீடூரில் சமையல்காரர் வெட்டிக்கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
-
இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி
-
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
-
கொலை வழக்கு தண்டனை: உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
-
நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்
-
கமிஷனில் இயங்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாக்கு