'பப்' பழக்கம் படுகுழியில் தள்ளியது; விடுதியில் சிக்கி தவித்த பெண் மீட்பு

16

சென்னை : தோழியுடன் விடுதி அறையில் தனிமையில் இருக்கும் காட்சியை, வீடியோ அழைப்பில் நண்பர்களுக்கு விருந்து படைக்க முயன்ற வாலிபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், 21 வயது பெண். இவர், சென்னை மேற்கு தாம்பரத்தில் தங்கி, ஸ்ரீபெரும்புதுாரில்உள்ள நிறுவனத்தில்வேலை பார்த்து வருகிறார்.


மது பழக்கம் உள்ள இவர், சென்னை கிண்டியில் உள்ள, 'பப்' ஒன்றுக்கு செல்வது வழக்கம். அந்த, 'பப்'புக்கு, நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த ஷாகின், 23, என்பவரும் செல்வது வாடிக்கை.



இளங்கலை பட்டதாரியான இவர், சென்னையில் செருப்பு கம்பெனியின் 'டீலர்' ஆக செயல்பட்டு வருகிறார். இருவரும் அறிமுகமாகி, ஓராண்டாக பழகி வந்துள்ளனர். இருவரும் மது போதையில் மிதந்துள்ளனர்.


மூன்று நாட்களாக, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது.


நள்ளிரவு, 1:00 மணியளவில் இருவரும்சேர்ந்து இருக்கும் காட்சியை, தன் நண்பர்களுக்கு விருந்தாக்கும் வகையில், அவர்களுடன் ஷாகின், 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறார் என, கருதினார்.



இதனால், மொபைல் போனுடன் கழிப்பறைக்குள் புகுந்து பூட்டிக் கொண்டுள்ளார். ஆபத்தான இடத்தில் இருப்பது பற்றி, உடன் பணிபுரியும் தோழிக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தான் இருக்கும் இடம் குறித்து, 'வாட்ஸாப் ஸ்டேட்டஸ்' வைத்து உள்ளார்.


இதை பார்த்த அவரின்உறவினர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, திருவான்மியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ., ராஜா மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று, இளம்பெண்ணை மீட்டுள்ளனர். ஷாகினை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement