இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

வயநாடு: வயநாடு முண்டகை பகுதியில் பெய்து வரும் கனமழையால் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
@1brகேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி பெய்த பெருமழை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கியது.நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.
ஒட்டுமொத்த நாடும், கேரளாவில் நிகழ்ந்த துயரத்தால் கடும் துயரம் அடைந்தது. இந்நிலையில் வயநாடு முண்டக்கை பகுதியில் பெய்து வரும் கனமழையால் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
புன்னம்புழா ஆற்றில் நீர் மட்டம் மழையின் எதிரொலியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தான் கடந்தாண்டு நிலச்சரிவின் போது பெய்லி பாலம் கட்டப்பட்டது.
பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்பதற்கான அதிகாப்பூர்வ அறிவிப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட இல்லை.
இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் வயநாடு, முண்டக்கை பகுதியில் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மழை பெய்யும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (5)
Tiruchanur - New Castle,இந்தியா
25 ஜூன்,2025 - 16:06 Report Abuse

0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
25 ஜூன்,2025 - 15:32 Report Abuse

0
0
Reply
baskkaran Kg - chennai,இந்தியா
25 ஜூன்,2025 - 14:12 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
25 ஜூன்,2025 - 13:50 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 ஜூன்,2025 - 12:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தி.மு.க., அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகும் அபாயம் ; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
அமெரிக்கா தாக்குதலால் தான் போர் முடிவுக்கு வந்தது: சொல்கிறார் டிரம்ப்
-
அபினந்தனை கைது செய்த பாக்., ராணுவ அதிகாரி பயங்கரவாத தாக்குதலில் பலி
-
ரேஷன் அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கு சுவரில் மோதி விபத்து
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
Advertisement
Advertisement