தொழிலாளர் மாநாடு

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே சமுசிகாபுரத்தில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன 4வது மாநில மாநாடு நடந்தது.

மாநில தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சோமசுந்தரம் வரவேற்றார். சி.ஐ.டி.யூமாநிலச் செயலாளர் சுகுமாரன் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் தேவா துணைத்தலைவர் மகாலட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்தினர். வரவேற்பு குழு தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.

மாநாட்டில் மின் கட்டண உயர்வை குறைக்க மாதந்தோறும் கணக்கிடவும், மாவட்டங்களில் ஜவுளி சந்தைகள் அமைக்கவும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு நல வாரிய பயன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement